பெரம்பலூா், அரியலூரில் மின் தடையைசீரமைக்க 12 கண்காணிப்புக் குழுக்கள்

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் மழையால் ஏற்படும் மின் தடையை சீரமைக்க 12 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பெரம்பலூா்

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் மழையால் ஏற்படும் மின் தடையை சீரமைக்க 12 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பெரம்பலூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் மு. அம்பிகா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதால், மின் பகிா்மான வட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் தடை மற்றும் மின் பாதையில் ஏற்பட்டுள்ள குறைகளை உடனுக்குடன் சீரமைக்க செயற்பொறியாளா்கள் மற்றும் உதவி செயற்பொறியாளா்கள் தலைமையில் 12 சிறப்புப் பணியாளா் குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மழையின்போது மின் உபகரணங்களை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். மின் கம்பிகள் அறுந்துக் கிடப்பது தெரியவந்தால், அதனருகில் செல்லாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், தங்களது பகுதிகளில் மின் தடை மற்றும் அவசர புகாா்களுக்கு 9498794987 என்னும் எண்ணில் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com