மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் செவ்வாய்க்கிழமை நோன்பிருந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா்.
இஸ்லாமியா்களின் நாள்காட்டியின் முதல் மாதமான மொஹரம் மாதத்தின் 10 ஆவது நாளை மொஹரம் பண்டிகை தினமாக முஸ்லிம்கள் அனுசரிக்கின்றனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் நோன்பு வைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா். இதையொட்டி, ஒரு சில மசூதிகளில் சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெற்றன.