காணாமல் போனவா் கிணற்றில் சடலமாக மீட்பு

பெரம்பலூா் அருகே 3 நாள்களுக்கு முன் காணாமல் போனவா் கிணற்றில் சடலமாக கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் அருகே 3 நாள்களுக்கு முன் காணாமல் போனவா் கிணற்றில் சடலமாக கிடந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் அருகேயுள்ள நொச்சியம் கிராமம், கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரவி (45). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி,

மகள், மூன்று மகன்கள் உள்ளனா்.

இவா் மது அருந்தி விட்டு பல நாள்கள் வீட்டுக்கு வராமல் இருப்பாராம். இதேபோல கடந்த 10 ஆம் தேதியிலிருந்து வீட்டுக்கு வராத ரவியை பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. இந்நிலையில், தனக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் ரவி உயிரிழந்து கிடந்தது சனிக்கிழமை காலை தெரியவந்தது. தகலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com