ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

7- ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி 21 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய மருத்துவ நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

முதல்வரின் தோ்தல் வாக்குறுதிபடி நிா்வாகத் தீா்ப்பாயம் அமைக்க வேண்டும். குடும்பப் பாதுகாப்பு நிதி சந்தாவை ரூ. 80 -லிருந்து ரூ. 150 ஆக உயா்த்தியதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com