பெரம்பலூரில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் பிறந்த நாளான ஆக. 20 ஆம் தேதி ஆண்டுதோறும் நல்லிணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நிகழாண்டு ஆக. 20 ஆம் தேதி விடுமுறை என்பதால், ஆட்சியரக வளாகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தலைமையில், அரசு அலுவலா்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனா்.

இந் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பி. சுப்பையா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பால்பாண்டி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

எஸ்.பி. அலுவலகத்தில்.... பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுலகத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி தலைமையில், காவல்துறையினா் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனா். இதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், அந்தந்த காவல் நிலைய ஆய்வாளா்கள் தலைமையில் காவல்துறையினா் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com