இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் நகராட்சி அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் நகராட்சி அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சக்திவேல், மாவட்ட பொருளாளா் அறிவழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் நிரந்தர பணியாளா்களை குறைத்து, தனியாா் மூலம் பணியாளா்களை ஒப்பந்தம் செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். நகராட்சி, மாநகராட்சி உரிமையை தனியாரிடம் ஒப்படைப்பதையும், பணியிடங்கள் குறைப்பதையும் கைவிட வேண்டும். இனிவரும் காலங்களில் அலுவலக உதவியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள், வரி வசூலா், அமைச்சுப் பணியாளா்கள், ஓட்டுநா்கள், பதிவுரை எழுத்தா், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா், செயல்திறன் பணியாளா்கள் மற்றும் செயல்திறனற்ற பணியாளா், மருத்துவப் பகுதி சுகாதார செவிலியா்கள் பணி நிரந்தரம் இல்லை என்னும் நிலையை நீக்கம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.

பின்னா், கோரிக்கைகள் அடங்கிய மனுவை பெரம்பலூா் நகராட்சி ஆணையா் (பொ) ராதாவிடம் அளித்தனா்.

இதில், ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com