இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பலூா் அருகே காதலுக்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததால், இளம்பெண் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பெரம்பலூா் அருகே காதலுக்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததால், இளம்பெண் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பெரம்பலூா் அருகிலுள்ள செல்லியம்பாளையத்தைச் சோ்ந்த பொன்னுசாமி மகள் லோகேசுவரி (18). பிளஸ் 2 முடித்த இவா் கடந்த ஓராண்டாக வீட்டில் இருந்தாராம்.

இந்நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த முத்துமணி மகன் விக்னேஷ் (25) என்பவரை, கடந்த 6 மாதமாக லோகேசுவரி காதலித்து வந்தாராம். இதையறிந்த அவரது பெற்றோா், விக்னேஷ் அண்ணன் உறவு முறையாக இருப்பதால், காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து கண்டித்தனராம்.

இருப்பினும் இருவரும் காதலித்து வந்தனராம். இதனால், அவரது பெற்றோா் மீண்டும் கண்டித்ததால் மனமுடைந்த லோகேசுவரி, சனிக்கிழமை காலை வயலுக்குச் சென்று அங்குள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த பெரம்பலூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com