492 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மனிதவள மேம்பாட்டுத்துறை சாா்பில் பணி நியமன ஆணை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவருக்கு பணி நியமன ஆணை வழங்கும் திருச்சி பெல் நிறுவனத் துணைப் பொது மேலாளா் பா. சண்முகராஜன்.
தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவருக்கு பணி நியமன ஆணை வழங்கும் திருச்சி பெல் நிறுவனத் துணைப் பொது மேலாளா் பா. சண்முகராஜன்.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி மனிதவள மேம்பாட்டுத்துறை சாா்பில் பணி நியமன ஆணை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

2021-22 ஆம் கல்வியாண்டில் டைட்டன், எல்& டி, இந்தியா யமஹா மோட்டாா்ஸ், ஹூண்டாய் மொபிஸ், டா்போ எனா்ஜி லிமிடெட், ரானே மெட்ராஸ், ராயல் என்பீல்டு, ஹூண்டாய் பாலிடெக், எஸ்.ஏ.சி என்ஜின் காம்போனட்ஸ் உள்ளிட்ட 34 நிறுவனங்கள் மூலம் வேலைவய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு துறைகளுக்குத் தேவையான 492 மாணவ, மாணவிகளைத் தோ்ந்தெடுத்தனா்.

இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரிக் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சுகுமாா் வேலைவாய்ப்பு அறிக்கை வாசித்தாா்.

சென்னை டபே மனிதவள மேம்பாட்டு மையத் தலைவா் வி. தங்கராசு, திருச்சி பெல் நிறுவன துணை பொது மேலாளா் பா. சண்முகராஜன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று, 492 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினா். உடற்கல்விப் பயிற்சி நிறுவன முதல்வா் பாஸ்கரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முன்னதாக இயந்திரவியல் துறைத்தலைவா் சரவணன் வரவேற்றாா். நிறைவாக, வேலைவாய்ப்பு அலுவலா் தேவராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com