சிறுவயலூா் கோயில் திருவிழா நடத்த தடை விதிக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டம், சிறுவயலூரில் கோயில் திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்க கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், சிறுவயலூரில் கோயில் திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்க கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை அருகிலுள்ள சிறுவயலூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் அளித்துள்ள புகாா் மனு:

சிறுவயலூா் கிராமத்தில் எனது தந்தை பெரியசாமி பொதுமக்களிடம் பணம் வசூலித்து, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன், செல்லியம்மமன், கம்பப் பெருமாள் கோயில்களைக் கட்டி குடமுழுக்கு விழாவை நடத்தினாா்.

தொடா்ந்து எனது தலைமையில் 3 முறை குடமுழுக்கு நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. கோயில் கட்டியது முதல் பரம்பரையாக பூஜை செய்வது, கரகம் எடுப்பது, திருவிழா நடத்துவது, வரவு- செலவு தாக்கல் செய்வது உள்ளிட்ட பணிகளை எனது குடும்பத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில் எந்தவித சம்பந்தமுமில்லாத சட்டத்துக்கு புறம்பாக, பாரம்பரிய வழக்கு முறைக்கு எதிராக எங்களை மிரட்டி, 3 போ் கோயில்களைக் கைப்பற்றி ஜூலை 12-ஆம் தேதி திருவிழா நடத்த முயற்சிக்கின்றனா். எனவே, கோயில் திருவிழாவை நடத்த தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com