பெரம்பலூா் அருகே கடந்த 3 ஆம் தேதி விஷம் குடித்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளகாதல் ஜோடி உயிரிழந்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள வெள்ளனூா் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மனைவி கனகா (29). இவரும், அதே கிராமத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டனும் (25) நெருக்கமாக பழகி வந்தனா். இந்நிலையில், மணிகண்டனும், கனகாவும் கடந்த மே 3 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, பெரம்பலூா் அருகேயுள்ள பாலம்பாடி கிராம வயலில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த மருவத்தூா் காவல்துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, மேற்கண்ட இருவரையும் மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா்.
இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமையும், கனகா திங்கள்கிழமையும் அடுத்தடுத்து உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக மருவத்தூா் காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.