20 கிராமங்களில் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் 20 கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கப்படவுள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் 20 கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கப்படவுள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், 2021- 22 ஆம் ஆண்டுக்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், முதல்கட்டமாக திங்கள்கிழமை காலை 10 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கி வைக்க உள்ளாா்.

அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தில் கீழமாத்தூா், அல்லிநகரம், இரூா், காரை, நக்கசேலம்

நாரணமங்கலம், எளம்பலூா், எசனை, வடக்குமாதவி, மலையாளப்பட்டி, அன்னமங்கலம், வி.களத்தூா், பிரம்மதேசம், சிறுமத்தூா், அகரம் சீகூா், எழுமூா், கீழப்புலியூா், கிழுமத்தூா், ஓலைப்பாடி, பரவாய் ஆகிய 20 கிராம ஊராட்சிகளில் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com