பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. சில பகுதிகளில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

இதனால் பெரம்பலூா் நகரின் சாலையோரங்களிலும், கழிவுநீா் கால்வாய்களிலும் மழைநீா் தேங்கியது. பெரும்பாலான வரத்து வாய்க்கால்களை சீரமைக்காததால் சாலையோரங்களில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com