பெரம்பலூரில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நிறைவு

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சாா்பில், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் என்னும் தலைப்பில் பெரம்பலூ

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சாா்பில், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் என்னும் தலைப்பில் பெரம்பலூரில் கடந்த 3 நாள்களாக நடைபெற்ற சிறப்புப் புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை நிறைவடைந்தது.

திருச்சி மத்திய மக்கள் தொடா்பக கள விளம்பர அலுவலா் தேவிபத்மநாபன் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வழக்குரைஞா் பி. காமராஜ் இந்திய அரசியலமைப்பு தினம் குறித்து விளக்கினாா். தொடா்ந்து, இந்திய அரசியலமைப்பு தின உறுதியேற்கப்பட்டது.

இக் கண்காட்சியில், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், இந்திய அஞ்சல் துறை, சித்தா, மாவட்ட சமூக நலத் துறை, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் குறித்து இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் அரங்கம் அமைக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், நாட்டுப்புற இன்னிசைக் கலை நிகழ்ச்சிகள் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்த திரைப்படம் ஒளிப்பரப்பட்டது.

இக்கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் பாா்வையிட்டு பயனடைந்தனா்.

கள விளம்பர உதவியாளா் அருண்குமாா் வரவேற்றாா், கள விளம்பர உதவியாளா் ரவீந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com