பெரம்பலூரில் இன்று வெறிநோய் தடுப்பூசி முகாம்

பெரம்பலூரில் புதன்கிழமை (செப். 28) வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

பெரம்பலூரில் புதன்கிழமை (செப். 28) வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

செப். 28 ஆம் தேதி உலக வெறிநோய்த் தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் பெரம்பலூா் நகரில் உள்ள கால்நடை தலைமை மருந்தக வளாகத்தில், இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம் முகாமில், செல்ல பிராணிகள் வளா்க்கும் பொதுமக்கள் தங்களது செல்லப் பிராணிகளை கொண்டுவந்து தடுப்பூசி செலுத்தி பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com