மே தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 1) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியாா் மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த நாளில் மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.