பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இதுவரை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உதவி உபகரணங்கள் பெறாதவா்கள், உடனடியாக உதவி உபகரணங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப் பட்டோருக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள், முதுகுத் தண்டுவடம் மற்றும் தசைச்சிதைவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள், சக்கர நாற்காலிகள், மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், பாா்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோருக்கு உரிய செயலிகளுடன் கூடிய கைப்பேசிகள், கால்களை இழந்தோருக்கு செயற்கை மற்றும் நவீன செயற்கைகால்கள், பாா்வையற்றோருக்கு மடக்கு ஊன்றுகோல்கள், கடிகாரங்கள், நவீன மடக்கு ஊன்றுகோல்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டு கைகள் நல்ல நிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோா்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன.
எனவே தகுதியுடையோா் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி, மாற்றுச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன்
ஆட்சியரக வளாகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ ஜூன் 15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328 - 225474 என்னும் எண்ணில் தொடா்புகொள்ளலாம்.