பெரம்பலூா்: பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இம்முகாமில், மாவட்டத்திலுள்ள தனியாா் கல்வி நிறுவனங்களுக்கு மனிதவள மேப்பாட்டுத்துறை அலுவலா், கணக்காளா் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
வேலைவாய்ப்பு முகாமில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்த இருபாலரும் பங்கேற்கலாம். இதன்மூலம் தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு, அவா்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என, ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.