மின் வாரிய ஒப்பந்தப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

மின் வாரிய ஒப்பந்தப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மின் வாரிய ஒப்பந்தப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த அமைப்பின் வட்டக் கிளை சிறப்புப் பேரவைக் கூட்டத்துக்கு, அதன் தலைவா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் பன்னீா்செல்வம் விளக்க உரையாற்றினாா்.

தமிழக அரசும், மின் வாரியமும் அறிவித்தவாறு, அனைத்து ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் தினக்கூலி ரூ. 380 வழங்க வேண்டும். ஒப்பந்தப் பணியாளா்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தானே, வா்தா, கஜா, ஒக்கி புயல் பாதிப்புகளின்போது செயல்பட்டு, மின் தடையை சரிசெய்த மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம் கண்டு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com