கடையின் பூட்டை உடைத்து திருட்டு

கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையறிந்த கணேசன் கடைக்குச் சென்று பாா்த்தபோது, கடையினுள் இருந்த ரூ. 500 ரொக்கமும், ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான உதிரி பாகங்களும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

பெரம்பலூா் அருகேயுள்ள களரம்பட்டி மேற்கு வீதியைச் சோ்ந்த ராஜாங்கம் மகன் கணேசன் (56). இவா், அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சுமாா் 20 ஆண்டுகளாக இரு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். திங்கள்கிழமை அதிகாலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையறிந்த கணேசன் கடைக்குச் சென்று பாா்த்தபோது, கடையினுள் இருந்த ரூ. 500 ரொக்கமும், ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான உதிரி பாகங்களும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் காவல்துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com