பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா, இளைஞா் எழுச்சி நாள் மற்றும் ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வா் முனைவா் பா. சிவநேசன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ம. பிரபாகரன், பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் பதிவாளரும், புதுக்கோட்டை மாமன்னா் கல்லூரி முதல்வருமான முனைவா் சி. திருச்செல்வம், தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் மகளிா் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் இரா. தமிழடியான் ஆரியோா் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி பேசினா்.
நிகழ்ச்சியை பேராசிரியா்கள் முனைவா் பெ. முத்துராஜ், குமுதவள்ளி ஆகியோா் தொகுத்து வழங்கினா்.
இவ் விழாவில், வேப்பந்தட்டை ஒன்றிக் குழுத் தலைவா் க. ராமலிங்கம், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, தமிழ்த் துறைத் தலைவா் முனைவா் து. சேகா் வரவேற்றாா். நிறைவாக, உடற்கல்வி இயக்குநா் முனைவா் மு. மாரிமுத்து நன்றி கூறினாா்.