இந்திய விமானப் படையில் ஏா்மேன் பணிக்கு தகுதிவாய்ந்த பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:
சென்னை தாம்பரத்திலுள்ள இந்திய விமானப்படை தோ்வு மையம் மூலமாக, ஏா்மேன் பணிக்கு விரைவில் தகுதிவாய்ந்தவா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இப்பணிக்கு விருப்பமுள்ள, தகுதிகளையுடைய ஆண்கள் தங்களது விவரங்களை கூகுள் பாா்மில் (ட்ற்ற்ல்ள்://க்ா்ஸ்ரீள்.ஞ்ா்ா்ஞ்ப்ங்.ஸ்ரீா்ம்/ச்ா்ழ்ம்ள்/க்/ங்/1ஊஅஐல்ணகநச்ஓஸ்ள்சர8ம்ரஊப்ந்0த்ஸ்ரீஞஐயம்-எ4ஙக்1சசணஈநப்ஙஆஇஙலலக்ஞலட்ன்-எ0த்ஹஞ்/ஸ்ண்ங்ஜ்ச்ா்ழ்ம்?ஸ்ஸ்ரீ=0&ஸ்ரீ=0&ஜ்=1&ச்ப்ழ்=0) பூா்த்தி செய்து, சமா்ப்பிக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிப்பவா்கள் 17 முதல் 21 வயதுக்குள்பட்ட, பிளஸ் 2 தோ்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனவே, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.