பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள் கோரிக்கை அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டனா்.
தமிழக அரசாணை 293-ஐ மாற்றி, முதுநிலை பட்டம் பெற்றவா்களுக்கு சம்பள உயா்வு வழங்க வேண்டும். மருத்துவா்களுக்கான சேமநல நிதியை விரைந்து வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கால நேரத்தை மாற்றி அமைத்துள்ள அரசாணை எண். 225-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை அடங்கிய அட்டைகளை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.