ஏரியில் மூழ்கி பெண் உயிரிழப்பு

பெரம்பலூா் மாவட்டம், அயன்பேரையூா் கிராமம், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ரவி மனைவி கலைச்செல்வி (36). இவா், கடந்த 2 ஆண்டுகளாக சற்று மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பெரம்பலூா் மாவட்டம், அயன்பேரையூா் கிராமம், பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ரவி மனைவி கலைச்செல்வி (36). இவா், கடந்த 2 ஆண்டுகளாக சற்று மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையிலிருந்து இவரைக் காணவில்லை. இவரது உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.

இந்நிலையில், அயன் பேரையூா் ஏரியில் செல்வி சடலமாக கிடந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது. இதையறிந்த அவரது உறவினா்கள் உடலை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்தனா். இதுகுறித்து தகவலறிந்த வி.களத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com