ஊட்டச்சத்து காய்கனி தோட்டம் அமைக்க 4,100 பெண்களுக்கு விதைகள் விநியோகம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்), வாய்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து, பெரம்பலூா் மாவட்டம்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்), வாய்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து, பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டாரத்துக்குள்பட்ட 39 ஊராட்சிகளில், ஊட்டச்சத்து காய்கனி தோட்டம் அமைப்பதற்காக 4,100 பெண்களுக்கு விதைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாதிரி நிலத்தில் விதைகளை விதைத்த திட்ட இயக்குநா் கருப்பசாமி பேசியது:

காய்கனிகள் மற்றும் கீரைகளில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். சிறந்த ஆரோக்கியமான தலைமுறைக்கு அதிக ஊட்டச்சத்துள்ள உணவுகள் உட்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

உதவித் திட்ட அலுவலா் ஜூலியஸ் சீசா் தியோடா் விளக்க உரையாற்றினாா். வாய்ஸ் அறக்கட்டளையின் வேளாண் ஒருங்கிணைப்பாளா் ரெ. கவிதா, விதைகளை விதைப்பது, நிலத்தை எவ்வாறு தயாா் செய்வது, செடிகளை வளா்ப்பது குறித்தும், பஞ்சகவ்யம், மீன் சாறு, மண்புழு உரம் உள்ளிட்ட இயற்கை இடுபொருள்கள் குறித்தும் விளக்கி பேசினாா்.

தொடா்ந்து, 4,100 பெண்களுக்கு பப்பாளி, முருங்கைக்காய், வெண்டைக்காய், பீா்க்கங்காய், பாகற்காய், அவரை, புடலை, கொத்தவரை, சிறுகீரை என 10 வகையான விதைகள் வழங்கப்பட்டன.

இதில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிா் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அஞ்சுகம், அமலா ஜெயசீலன், மாலதி, அறக்கட்டளை நிா்வாகிகள் காா்த்திகேயன், பிரகாஷ், விக்டோரியா உள்பட பலா் பங்கேற்றனா்.

நிறைவாக, வட்டார மேலாளா் மகேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com