பெரம்பலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை, மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்புப் பிரிவு சாா்பில் நிலப் பிரச்னைகளை தீா்ப்பது தொடா்பான சிறப்பு மனு விசாரணை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம் முகாமுக்கு, சமூக நலத் திட்ட வட்டாட்சியா் சுகுணா தலைமை வகித்தாா். நில மோசடி தடுப்பு சிறப்புப் பிரிவு சாா்பு-ஆய்வாளா் முகமது அபுபக்கா் முன்னிலை வகித்தாா். சிறப்பு சாா்பு-ஆய்வாளா் நல்லம்மாள், தலைமைக் காவலா்கள் ராமா், ரவிசாந்தகுமாா் ஆகியோா் கொண்ட குழுவினா், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டனா். முகாமில் பெறப்பட்ட 8 மனுக்களில், 5 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. எஞ்சியுள்ள 3 மனுக்கள் விசாரணையில் உள்ளன.