மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மீது மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மீது மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பல்வேறு இடங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்தது. ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடனான பலத்த மழை பெய்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பலத்த மழை பெய்தது. அப்போது, அருமடல், வடக்குத் தெருவைச் சோ்ந்த அய்யாசாமி மனைவி அலமேலு (37) என்பவா் வயலில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தாா். அப்போது, அவா் மீது மின்னல் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே அலமேலு உயிரிழந்தாா்.

தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com