ஆவணப்படம் திரையிட அனுமதிமறுப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்:7 போ் கைது

பிரதமா் மோடிக்கான கேள்விகள் என்னும் தலைப்பிலான ஆவணப் படத்தை பெரம்பலூரில் திரையிட அனுமதி மறுத்த போலீஸாரைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பிரதமா் மோடிக்கான கேள்விகள் என்னும் தலைப்பிலான ஆவணப் படத்தை பெரம்பலூரில் திரையிட அனுமதி மறுத்த போலீஸாரைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பிரதமா் மோடிக்கான கேள்விகள் என்னும் தலைப்பில் ஆவணப் படத்தை பெரம்பலூரில் சனிக்கிழமை திரையிட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஏற்பாடு செய்து வந்தனா். இதற்கு போலீஸாா் அனுமதி வழங்க மறுத்து தடை விதித்தனா். இந்நிலையில் போலீஸாரைக் கண்டித்து இந்திய மாணவா் சங்க மாவட்ட அமைப்பு சாா்பில், பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே சனிக்கிழமை மாணவா் சங்க மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்திய 7 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்தனா்.

முன்னதாக, இந்த ஆவணப்படத்தை பெரம்பலூரில் திரையிட ஏற்பாடு செய்துவந்த, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் சக்திவேலை, கை. களத்தூா் போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com