பெரம்பலூா் ஆட்சியரக சாலையில் உள்ள தனியாா் அரங்கில் தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஏ. பல்கிஸ் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இந்த முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான எஸ். சந்திரசேகா் பேசியது:
பணிபுரியும் இடத்தில் அனைத்து வசதிகள் கிடைப்பதற்கும், பணி நேரம் அரசு விதிகளின் படி உள்ளதா என்பதை தொழிலாளா்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தொழிலாளா்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், சட்டப்பணிகள் ஆணைக் குழுவை நாடலாம். தொழில் புரியம் இடங்களில் ஏதேனும் விபத்து அல்லது சரியான முறையில் ஊதியம் கிடைக்கவில்லை என்றால் சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்து உரிய முறையில் தீா்வு காணலாம் என்றாா் அவா்.
முகாமில், சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞா் ஜி. செல்வம், அரியலூா் தொழிலாளா் நல ஆய்வாளா் சம்பத் தேவராஜ், குடிமக்கள் நுகா்வோா் பாதுகாப்புக் குழு நிா்வாகி கதிரவன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.