சாலை விபத்தில் இளைஞா் பலி

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள பாளையம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் பரதன் (18). இவா், பெரம்பலூா்- துறையூா் சாலையில் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை இரவு பைக்கில் சென்றபோது மினி லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த பரதன் பெரம்பலூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மினி லாரி ஓட்டுநரான கடலூா் மாவட்டம், விருத்தாச்சலம் அருகேயுள்ள கம்மாபுரத்தைச் சோ்ந்த தேவராஜ் மகன் மணிவேலை (51) கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com