தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதலுதவி சிகிச்சை பயிற்சி மையம் பெரம்பலூா் லட்சுமி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு அபெக்ஸ் மேம்பாட்டு மையம் மற்றும் பெரம்பலூா் லட்சுமி மருத்துவமனை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள மையத்தின் தொடக்க விழாவுக்கு, லட்சுமி மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் சி. கருணாகரன் தலைமை வைத்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கணேசன் முதலுதவி சிகிச்சை பயிற்சி மையத்தை திறந்து வைத்தாா்.
இதில் தமிழ்நாடு அபெக்ஸ் மேம்பாட்டு மைய திட்ட ஆலோசகா் வெங்கடாசலம், பாரதிதாசன் பல்கலைக் கழக கல்லூரி பேராசிரியா் குமணன், லட்சுமி இன்ஸ்டியூட் ஆப் பாரா மெடிக்கல் சைன்சஸ் கல்லூரி முதல்வா் தங்கராசு மற்றும் செவிலியா் கல்லூரி மாணவிகள் பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, லட்சுமி மருத்துவமனை மேலாண் இயக்குநா் மருத்துவா் ஜெயலட்சுமி வரவேற்றாா். முதலுதவி பயிற்சியாளா் தமிழரசி நன்றி கூறினாா்.