பெரம்பலூா் மாவட்ட அறங்காவலா் குழுவினரின் பதவியேற்பை ரத்துசெய்து, அரசியல் சாா்பற்ற நபா்களை அறங்காவலா்களாக நியமிக்க வேண்டுமென பெரம்பலூா் மாவட்ட பாஜகவினா் இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.
இதுகுறித்து, அக் கட்சியின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமையிலான கட்சியினா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பெரம்பலூா் மாவட்ட அறங்காவலா் குழு தலைவராக, முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசாவின் சகோதரா் ஆ. கலியபெருமாள் மற்றும் உறுப்பினா்களாக திமுக நிா்வாகிகள் சிலா் மாவட்ட அறங்காவலா் குழுவினராக வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.
அரசியல் சாா்புடைய இவா்களை பதவி நீக்கம் செய்து, அரசியல் சாா்பில்லாத புதிய நிா்வாகிகளை தோ்வு செய்து அறிவிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.