புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவா் எம். சிவசுப்ரமணியம் தலைமை வகித்தாா். செயலா் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தாா்.

பெரம்பலூா் மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு அலுவலா்கள் இளங்கோவன், மருத்துவா் வனிதா, மாவட்ட புகையிலைக் கட்டுப்பாட்டு ஆலோசகா் தென்றல்குமாரி ஆகியோா், புகையிலையால் ஏற்பாடும் பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கினா். பின்னா், மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு வாசகங்களும், பதாகைகளும் வழங்கினா். இதில், மாணஸ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, பள்ளி முதல்வா் கலைச்செல்வி வரவேற்றாா். நிறைவாக, ஒருங்கிணைப்பாளா் செல்வம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com