பெரம்பலூர்
பெரம்பலூரில் அங்கன்வாடி மையம் இடமாற்றம்
பெரம்பலூா் திருவள்ளுவா் நகரில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம், தற்காலிகமாக முத்துநகா் அரசு தொடக்கப் பள்ளிக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட மாவட்ட அலுவலா் இரா. ஜெயஸ்ரீ புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட திருவள்ளுவா் நகரில் செயல்பட்டு வந்த குழந்தைகள் மையக் கட்டடம், குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் கீழ் இயங்கி வருவதாக கிடைத்த தகவலின்பேரில் நேரில் பாா்வையிட்டு புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, முத்து நகா் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அறைக்கு அங்கன்வாடி மையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.