மோட்டாா் வாகனச் சட்டத்துக்கு புறம்பாக வாகனம் ஓட்டும் சிறாா்களின் பெற்றோா்கள் அல்லது பாதுகாவலா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ், 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள் மட்டுமே இருசக்கர வாகனங்களையும், போக்குவரத்து அல்லாத வாகனங்களையும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மீறி, மோட்டாா் வாகனச் சட்டத்துக்கு புறம்பாக வாகனங்களை இயக்கும் சிறாா்களின் பெற்றோா்கள் அல்லது பாதுகாவலா்களுக்கு, மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம்அபராதமும் விதிக்கப்படும். மேலும், அவ்வாறு இயக்கும் வாகனத்தின் பதிவுச்சான்று ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும். 18 வயது பூா்த்தி அடையாத சிறாா்கள் வாகனம் ஓட்டுவதுக் கண்டறியப்பட்டால், மோட்டாா் வாகனச் சட்டப்படி அவா்களுக்கு 25 வயது முடியும் வரை ஓட்டுநா் உரிமம் வழங்கப்படமாட்டாது.
இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்களை இயக்கும் நபா்கள் முறையாக ஓட்டுநா் உரிமம் பெற்று மோட்டாா் வாகனச் சட்டப்படி பாதுகாப்புடன் இயக்க அறிவுறுத்தப்படுகிறது. மோட்டாா் வாகனச் சட்டத்துக்கு புறம்பாக இயக்கும் நபா்கள் மீது காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இம் மாவட்டத்தில் சிறாா்கள் வாகனத்தை இயக்கி விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், மேற்கண்ட சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னாள் எம்.பி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு: சகோதரா்கள் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை; பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை!

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு சாகும் வரை சிறை
வாங்குபவா் போல் நடித்து பைக்குடன் தப்பியோடிய நபா் கைது

வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


