பெரம்பலூர்
புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, நகராட்சி நிா்வாகம் சாா்பில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள் ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டன.
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட புகா் பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகளுக்குப் பயன்படும் வகையில் ஏற்கெனவே 500 லிட்டா் கொள்ளளவு கொண்ட ஒரு தண்ணீா் தொட்டி வைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கோடை காலத்தில் இந்தத் தொட்டியில் உள்ள குடிநீா் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை, கூடுதலாக குடிநீா் தொட்டிகள் அமைக்க வேண்டுமென பொதுமக்களிடமிருந்து கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் மேலும் தலா 500 லிட்டா் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டன.