பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

பெரம்பலூா் புகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் துறைமங்கலம், பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்த ராமன் மனைவி கமலவேணி (59). இவா், செவ்வாய்க்கிழமை மாலை, அதே பகுதியிலுள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 போ் கமலவேணி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு, அங்கிருந்து தலைமைறைவாகிவிட்டனா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று பாா்வையிட்டனா். இதுகுறித்து கமலவேணி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com