பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. கற்பகம் வியாழக்கிழமை பறக்கவிட்டாா். வரும் மக்களவைத் தோ்தலில் 18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தும் விதமாக, பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், அனைவரும் வாக்களிப்போம்- 100 சதவீதம் வாக்களிப்போம் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகம் வியாழக்கிழமை பறக்கவிட்டாா். நிகழ்ச்சியில் மகளிா் திட்ட அலுவலா் அருணாசலம், தோ்தல் விழிப்புணா்வு பணிக்கான ஒருங்கிணைப்பாளா் கோபால், தோ்தல் வட்டாட்சியா் அருளானந்தம் ஆகியோா் பங்கேற்றனா்.