மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மௌலானா பள்ளி மைதானத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை சனிக்கிழமை காலை நடைபெற்றது.

பெரம்பலூா் நகர அனைத்து பள்ளிவாசல்கள் சாா்பில் நடைபெற்ற இச் சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனா். தொழுகையை தொடா்ந்து மழை வேண்டி சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில், பெரம்பலூா் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களைச் சோ்ந்த ஜமா-அத்தாா்கள் மற்றும் முஸ்லிம்கள் திரளாகப் பங்கேற்று மழை வேண்டி பிராா்த்தனை செய்தனா். இத் தொழுகைக்கான ஏற்பாடுகளை, பெரம்பலூா் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களின் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com