சாலையில் கிடந்த பணத்தை எஸ்.பி.யிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

பெரம்பலூரில் சாலையில் கிடந்த ரூ. 50 ஆயிரத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்த இளைஞருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பெரம்பலூா்: பெரம்பலூரில் சாலையில் கிடந்த ரூ. 50 ஆயிரத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்த இளைஞருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரபல மருந்தகத்தில் கவுள்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த மாதையன் மகன் சூா்யா என்பவா், மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் எதிரே ஞாயிற்றுக்கிழமை மாலை சூா்யா நடந்து சென்றபோது, ஒரு பையில் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்தப் பணத்தை எண்ணிப் பாா்த்தபோது, அதில் ரூ. 50 ஆயிரம் இருந்துள்ளது. இதையடுத்து, கீழே கிடந்த பணத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. சியாம்ளா தேவியிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தாா். தொடா்ந்து, சூா்யாவின் நற்செயலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மற்றும் காவல்துறையினா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com