விராலிமலை அருகே காசுவைத்து சூதாடிய 7 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
விராலிமலை அருகேயுள்ள பாட்னாப்பட்டியில் காசுவைத்து சூதாட்டம் நடப்பதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது காட்டுப்பகுதியில் சி. செல்வராஜ், எஸ். செல்வராஜ், த. அய்யாக்கண்ணு, கே. குமார், மு. குமரேசன், சின்னக்கண்ணு, சி. குருசாமி ஆகிய 7 பேர் காசுவைத்து சூதாடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்த 700 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.