பொன்னமராவதி சிட்டி அரிமா சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கண் தானம் பெறப்பட்டது.
ஆலவயல் சபரீஸ்வரன், ஆனந்தகுமார் ஆகியோரின் தந்தையார் சண்முகம் இயற்கை எய்தியதையொட்டி அவரது கண்களை வட்டாரத் தலைவர் சுந்தரமூர்த்தி, சிட்டி அரிமா சங்கத் தலைவர் செ. பாலமுரளி, செயலர் பிரவீன்குமார், பொருளாளர் நாசர், முன்னாள் தலைவர்கள் முகமது ஹனிபா, நாகராஜன், எஸ். பழனியப்பன் ஆகியோர் தானமாக பெற்று மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இது சிட்டி அரிமா சங்கத்தின் இந்த ஆண்டின் 2 ஆவது கண் தானமாகும்.