புதுக்கோட்டை சிப்காட் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 8) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பள்ளத்திவயல், சிப்காட், தாவூத்மில், வடசேரிபட்டி, இச்சடி,வடவாளம், கேடயப்பட்டி, காயம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம்
இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.