அறந்தாங்கியிலிருந்து திருமயத்துக்கு நேரடி பேருந்து வசதி வேண்டும் என வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அறந்தாங்கி வர்த்தக சங்க செயற்குழுக் கூட்டம் தலைவர் நா. சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது, செயலர் மு.சி. பன்னீர்செல்வம், பொருளாளர் எஸ். முபாரக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் காரைக்குடியிலிருந்து அறந்தாங்கி வழியாக திருவாரூர் வரை அகல ரயில்பாதைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
அறந்தாங்கி பகுதியில் பணிகளை விரைவாக முடித்த ரயில்வே அலுவலர்களுக்கு நன்றி. நகரில் பசுமைத் திட்டம் செயல்படுத்த நகரம் முழுவதும் வர்த்தக சங்கம் சார்பாக மரக்கன்று நட்டுப் பராமரிப்பது, அறந்தாங்கி- புதுக்கோட்டை சாலையைச் சீரமைத்த நெடுஞ்சாலைத் துறையினருக்கு நன்றி தெரிவிப்பது, புதிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க குழு அமைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.