கந்தர்வகோட்டை அருகே உள்ள பெருச்சுவன்னியம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சித்திவிநாயகர்ஆலய கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை இதற்கான பூஜைகள் தொடங்கின. அதைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மஹாகும்பாபிஷேகம் மிகக் சிறப்பாக நடைபெற்றது. மூலவர் சன்னதியில் உள்ள விநாயகருக்கு திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா பெரும்சாந்தி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. குடமுழுக்கு விழாவில் திரளானோர் பங்கேற்றனர். இரவு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.