புதுக்கோட்டை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை ஓய்வு பெற்றோர் நலச் சங்க முதலாண்டு மாவட்ட மாநாடு அண்மையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் பாலையா தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் வேங்கடராஜ், பொதுச் செயலாளர் தமிழரசு, பொருளாளர் ஜேசுதாஸ் டேனியல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று பேசினர்.
சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முத்துசாமி ஆண்டறிக்கையும், பொருளாளர் ராஜேந்திரன் நிதிநிலை அறிக்கையும் வாசித்தனர். ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ. 500 என்பதை ரூ. 1000 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணிமுடித்த 2 ஆம் நிலை சாலை ஆய்வாளர்களுக்கு முதல்நிலை சாலை ஆய்வாளராகப் பணி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மாவட்ட இணைச் செயலாளர் நாகேந்திரன் வரவேற்றார். நிர்வாகி கண்ணுராவ் நன்றி கூறினார்.