புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற அரசுப் பேருந்து எதிரே வந்த பேருந்து மற்றும் பக்கவாட்டில் வந்த பேருந்தின் மீது மோதியதில் பேருந்து ஓட்டுநர்கள் உள்பட 13 காயமடைந்தனர்.
ராமேசுவரத்திலிருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து திருமயம் அருகே உள்ள ஊனையூர் என்ற இடத்தில் வந்த போது முன்னால் காரைக்குடியிலிருந்து திருச்சி சென்ற அரசுப் பேருந்தை முந்த முயன்றது. அப்போது, எதிரே திருச்சியிலிருந்து காரைக்குடி நோக்கி வந்த மற்றொரு அரசுப் பேருந்து மீதும் பக்கவாட்டில் வந்த பேருந்தும் மோதியது.
இதில் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜபிரசாத் (17) என்பவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் 2 அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட 13 பேர் காயமடைந்தனர். இது குறித்து திருமயம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.