பொன்னமராவதி புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியர் கி. நிர்மலா தலைமை வகித்தார். முத்தமிழ்ப்பாசறைத் தலைவர் அரு.வே. மாணிக்கவேலு, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அ. கருப்பையா ஆகியோர் வாழ்த்தினர். ஆசிரியை மீனாட்சி குழந்தைகள் தின சிறப்பை விளக்கினார். தொடர்ந்து கலைநிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அரசு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஆசிரியர் செல்லப்பாண்டி, அகிலா ஆகியோர் நிகழ்வைத் தொகுத்தனர். தமிழாசிரியர் சுதா நன்றி கூறினார்.
அதுபோல பொன்னமராவதி அரிமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி முதல்வர் சுப்பையா தலைமை வகித்தார். அரிமா சங்கத் தலைவர் என்ஏ. பாஸ்கரன், அரிமா கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் திருநாவுக்கரசு, அண்ணாமலை, அரிமா சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், அ. தங்கப்பன். எஸ்டி. காமராஜ் ஆகியோர் வாழ்த்தினர். ஆசிரியை நாராயணி வரவேற்றார்.