புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த இரண்டு சிறுமிகளை வெள்ளிக்கிழமை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இரண்டு சிறுமிகள் பிச்சை கேட்டு சுற்றுவதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்ற மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் இளையராஜா தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் பிச்சை எடுத்துகொண்டிருந்த 14 வயதுள்ள சரஸ்வதி, காமாட்சி என்று 2 சிறுமிகளை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
இச்சிறுமிகள் கடத்திவரப்பட்டனரா என்றும், இவர்களது பெற்றோர் குறித்தும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.