புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் புதுக்கோட்டை தன்னார்வப் பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்கம், புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பகம் இணைந்து டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலை தேர்வுக்கான இலவசப் பயிற்சி ஆக.18-ம் தேதி சனிக்கிழமை தொடங்குகிறது.
பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு நடைபெறும். இப்பயிற்சியில் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் பங்கேற்று பயன் பெறலாம். மேலும் விவரங்க ளுக்கு 97864-41417, 94459-55451. மன்னர் கல்லூரி முதல்வர் ஜெ. சுகந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இதைத் தெரிவித்தார்.