பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மதியழகன் தலைமைவகித்தார். ஒன்றிய ஆணையர் ஜெயந்திதேவி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்தல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதி ஊரகத்திட்டம், முழு சுகாதார தமிழகம், குழந்தை திருமணம் தடுத்தல் உள்ளிட்டவை கூட்டப் பொருளாக கொண்டு விவாதிக்கப்பட்டது. முன்னாள் ஊராட்சித் தலைவர் ச.சோலையப்பன், ஊராட்சி செயலர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், பொன்னமராவதி ஒன்றியத்திற்குள்ப்பட்ட 42 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.